Sunday, February 21, 2010

தங்கேஸ்வரி அரசாங்கத்துடன் இணைந்தார். வேட்பு மனுவில் இன்று கையொப்பம்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி எதிர்வரும் ஏப்பரல் 8ம் திகதி இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுத்திர முன்னணியில் போட்டியிடுகின்றார். மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் பட்டியலில் இன்று அவர் கையொப்பம் இட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு இடமளிக்கப்படாததையடுத்தே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் ஊடகமொன்றுக் தெரிவித்துள்ளார். இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஒன்பது பேருக்கு கூட்டமைப்பு இம்முறை தேர்தலில் பங்கு பெற வாய்பளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் புலிகளின் பிரதிநிதிகளாக கூட்டமைப்பில் அவ்வியக்கத்தால் உட்புகுத்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com