Thursday, February 4, 2010

ஸ்ரீ.சு.க வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோருகின்றது.

எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்களிடம் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டும் இளையோருக்கு முதலுரிமை வழங்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்விண்ணப்பங்கள் எதிர்வரும் 5ம் திகதி அல்லது அதற்கு முன்னர் அனுப்பி வைக்கப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் கட்சியின் வேட்பு மனுக்களுக்கான சபையினால் பரிசீலிக்கப்படும். இச்சபையினால் நிராகரிக்கப்படும் விண்ணப்பதாரிகள் கட்சியின் மேல் முறையீட்டு சபையில் நீதி கோரலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment