Wednesday, February 24, 2010

வன்னியில் புளொட், இரு சுயேச்சைகள் நேற்று வேட்பு மனுதாக்கல்.

வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவத ற்காக புளொட் நேற்று (24) வேட்பு மனுத் தாக்கல் செய்தது. புளொட் முதன்மை வேட்பாளராக கட்சித் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் போட்டியிடுகிறார். புளொட் பட்டியலில் க. சிவனேசன், ரஞ்சித் ருஸ் வேல்ட், ஈ.பரஞ்சோதிலிங்கம், க. ஞானதாஸ், பு. பாலச்சந்திரன், சு. வரோனிகா, பு. திருச் செல்வன், து. சுந்தரராஜ் ஆகியோரும் அட ங்குவர். இது தவிரவும், இரண்டு சுயேச்சைக் குழுக்களும் நேற்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா கு. கனேஸ்வரன் தலைமையிலான சுயேச் சைக் குழுவில் சி. உதயராசா, வி. கலைச்செல்வன், த. நவநீதன், இ. சுப்பிரமணியம், க. பெரியண்ணன், க. சகுந்தலாதேவி, ஐ. ஏநோக், கு. அந்தோனி ஆகியோர் போட்டியிடுகின்றனர். மு. சகாப்தீன் தலைமையிலான குழுவில் இ. முத்து முகமது, மீ. அமீன், ர. ரவுசான், மு. அன்வர், மு. பிரதிவிராஜ் வாசன், எம். ஜவாத்கான், ஆர். ஆர். பெதிகே விஜித ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

No comments:

Post a Comment