Wednesday, February 10, 2010

கண்ணீர் விட்டு அழுத இங்கிலாந்து பிரதமர்.

லண்டனில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் அளித்த பேட்டி ஒன்றில் அவர் பலமுறை உணர்ச்சி வசப்பட்டதுடன், ஒரு கட்டத்தில் இறந்த தனது மகள் ஜெனீபர் பற்றி கூறுகையில் கண்ணீர் விட்டு அழுதார்.

கடந்த 2002ஆம் ஆண்டு முதல் குழந்தையாக குறை பிரசவத்தில் ஜெனீபர் பிறந்தாள். ஆனால் பிறந்த 10 நாட்களிலேயே மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக இறந்து விட்டாள்.

தற்போது இவரது 3 வயது மகன் பிரசாரும் சிறுநீரக கோளாறினால் அவதிப்பட்டு வருகிறான். அவனது உடல் நிலையும் மோசமாக உள்ளது. எனவே தான் அவர் கதறி அழுதார்.

அப்போது அவரது மனைவி சாராவும் உடன் இருந்தார். கணவர் பிரவுன் அழுவதை பார்த்து அவரும் கதறி கண்ணீர் விட்டார். இச்சம்பவம் டி.வி. நிலைய ஊழியர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.


1 comments :

Anonymous ,  February 10, 2010 at 7:42 AM  

Deep prayers and trust in God along with treatments would defnitely
heal the child.May God bless the sickly child.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com