Tuesday, February 23, 2010

7 வயது மகளை கற்பழித்து கொன்ற தந்தை கைது.

7 வயதுடைய மகளை கற்பழித்து கொலை செய்த தந்தையை ஆனமடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். தனது குழந்தை மீது படுபாதக செயலை புரிந்த நபர் உடலை தீயிட்டு கொழுத்திவிட்டு விடயத்தை எவருக்கும் சொல்லக்கூடாது என மனைவியை அச்சுறுத்தி வந்துள்ளார். விடயம் ஒருவாறு வெளிவந்தபோது பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். நீதி மன்றில் ஆஜர் படுத்தப்பட்ட சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு ஆனமடுவ மஜிஸ்ரேட் கேசான் டி மெல் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment