Monday, February 8, 2010

யு.எஸ்.: மின் நிலைய வெடி விபத்தில் 50 பேர் பலி!

அமெரிக்காவில் மின்நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 50 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவின் கனெக்டிக்கட் மாகாணத்தில், மிடில் டவுண் என்னுமிடத்தில் நிறுவப்பட்டு வரும் மின் நிலையத்தில் வாயுக்கலன் ஒன்று வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் 5 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், மேலும் பணியிலிருந்த 45 க்கும் அதிகமானோரின் நிலைமை என்ன என்று தெரியவில்லை.இதனால் அவர்களும் பலியாகி இருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அங்கு சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த வெடிவிபத்தினால் ஏற்பட்ட நெருப்பு ஜுவாலை ஏறத்தாழ 48 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சிதறியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment