Wednesday, February 24, 2010

மட்டக்களப்பு சிறுமி கற்பழிப்பு : 41 படையினர் நீதிமன்றில் அடையாளம் அணிவகுப்பில்.

மட்டக்களப்பு திகிலவட்டை பிரதேசத்தில் பாடசாலை விட்டு வீடுசென்று கொண்டிருந்த 11 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியிலுள்ள முகாமொன்றைச் சேர்ந்த படையினர் மூவரால் கற்பழிக்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் மற்றும் இராணுவப் பொலிஸார் குறிப்பிட்ட தினம் அப்பகுதியில் கடமையிலிருந்த 41 இராணுவத்தினரை இன்று மட்டக்களப்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் அடையாள அணிவகுப்பிற்காக நிறுத்தவுள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் சிறுமியுடன் பாடசாலையிலிருந்து திரும்புகையில் படையினர் துரத்தியபோது ஓடித்தப்பிய வேறுசில சிறுமிகள் உட்பட வேறுபலரும் சந்தேக நபர்களை அடையாளம் காட்டவுள்ளதாக தெரியவருகின்றது.

சம்பவத்தில் இராணுவத்தினர் சம்பந்தப்பட்டதாக நிருபிக்கப்பட்டால் அவர்களுக்கு கடும்தண்டனை வழங்கப்படும் எனவும் விசாரணைகள் முடக்கிவிடப்பட்டுள்ளதாகவும் நேற்று இராணுவப் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாககும்.

No comments:

Post a Comment