Tuesday, February 23, 2010

ஹைதி தீவில் பூகம்பத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3 லட்சமாக உயர்ந்தது

அமெரிக்கா அருகே உள்ள ஹைதி தீவு நாட்டில் கடந்த மாதம் பூகம்பம் ஏற்பட்டது. இதில் 2 லட்சம் பேர் பலியானதாக அன்றைய நிலவரப்படி அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான போது மீட்பு பணிகள் நிறைவு அடையாமல் இருந்தது. மீட்பு பணிகள் இப்போது தான் முழுமையாக முடிந்தது. கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி பிணமானவர்களின் உடல்களை அகற்றும் பணி சமீபத்தில் தான் முடிவு அடைந்தது. காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிலர் சிகிச்சை பலன் அளிக்காமல் பலியானார்கள். இப்படி இறந்தவர்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்த போது இந்த பூகம்பத்துக்கு 3 லட்சம் பேர் பலியானதாக அந்த நாட்டின் அதிபர் ரெனே பெர்வால் தெரிவித்தார்.

No comments:

Post a Comment