Friday, February 26, 2010

அம்பாறையில் புதிய தேர்தல் சாதனை : 21 கட்சிகளும் , 45 சுயேட்சை குழுக்களும்.

7 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 660 வேட்பாளர்களை நிறுத்தி அம்பாறை மாவட்டம் புதிய தேர்தல் சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளது. 45 சுயேட்சைக்குழுக்களும் 21 அரசியல் கட்சிகளும் போட்டியிடுகின்றன.

20 பிரதேச செயலகங்கைளையும் 507 கிராம சேவகர் பிரிவுகளையும் கொண்டுள்ள அம்பாறை மாவட்டத்தில் 268,630 முஸ்லிம்களும், 228,938 சிங்களவர்களும், 111,948 தமிழர்களும் வாழ்கின்றனர். இவர்களில் 420,935 பேர் வாக்களிக்கத் தகுந்தவர்களாகும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பி. துயாரத்தின தலைமையில் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. தமிழர்கள் சார்பில் அம்பாறை மாவட்டத்திற்கான ஜனாதிபதி இணைப்பாளர் இனிய பாரதிக்கும், முஸ்லிம்கள் தரப்பில் 5 பேருக்கும், சிங்களவர்கள் தரப்பிலிருந்து 4 பேருக்கும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் போட்டியிடுகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திரநேரு சந்திரகாந்தன் தலைமையில் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

1 comments :

Anonymous ,  February 26, 2010 at 9:01 PM  

This indicates the judgement over the voters "lack of both knowledge and firm decisive decision" of
casting their ballots to the proper
candidate.Think twice or many times for the best candiadte and cast the votes.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com