Tuesday, February 2, 2010

ஜனாதிபதியின் அடுத்த வேவைக்காலம் 2010 நவம்பரில் ஆரம்பமாகின்றது. உச்ச நீதிமன்று.

ஜனாதிபதியின் சேவைக்காலம் இன்னும் இருவருடங்கள் உள்ள நிலையில் தேர்தல் நடாத்தப்பட்டு மீண்டும் மஹிந்த ராஜபக்ச வெற்றியீட்டியுள்ளார். இந்நிலையில் அவர் எப்போது பதவி ஏற்க வேண்டும் என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது. இன்று 7 நீதிபதிகள் அமர்ந்து இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் அவர் தனது அடுத்த சேவைக்காலத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அஸ்கிரிய பீட மகாநாயகர்களைச் சந்திக்கச் சென்ற நாட்டின் ஜனாதிபதி, எதிர்வரும் 4ம் திகதி சுதந்திர தினத்தன்று புதிய சேவைக்காலத்திற்காக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக மகாநாயக்க தேர்களுக்கு தெரிவித்ததாக அவருடன் சென்றிருந்த அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல ஊடகமொன்றுக்கு தெரிவித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment