Thursday, February 4, 2010

1573 கைதிகளுக்கு பொது மன்னிப்பு.

இலங்கையின் 62 ம் சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு குற்றங்களுக்காக சிறைத்தமண்டனை வழங்கப்பட்டிருந்த 1573 பேருக்கு இன்று பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 42 பேர் பெண்கள் என தெரியவருகின்றது. பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தவர்களில் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் சிறைத்தண்டைனை வழங்கப்பட்டிருந்த எவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனரா என்பது தொடர்பாக தெளிவாக தெரியவரவில்லை. இது தொடர்பாக எமது செய்தியாளர் சிறைச்சாலைகள் நிர்வாகத்தினரை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகின்றார்.

No comments:

Post a Comment