மெக்சிகோ நாட்டில் மர்ம மனிதன் 13 பேரை சுட்டுக்கொன்றான். மெக்சிகோ நாட்டில் உள்ள ஏசாகா என்ற இடத் தில் மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கியுடன் காரில் வந்தான்.அவன் ஒரு வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த ஆண் மற்றும் அவருடைய 3 குழந்தைகளை சுட்டுக் கொன்றான்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களையும் நோக்கி அவன் சரமாரியாக சுட்டான். அவர்களில் 4 பேர் பலியானார்கள்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்களை கண்டதும் காரில் ஏறி தப்பி ஓடினான். போலீசாரும் காரில் அவனை விரட்டி சென்றனர். அப்போது போலீசாரை நோக்கியும் சரமாரியாக சுட்டான். இதில் 5 போலீசார் உயிர் இழந்தனர்.
13 பேரையும் கொன்று விட்டு மர்ம மனிதன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். அவன் யார் என்ற விவரம் தெரியவில்லை.
மெக்சிகோ நாட்டில் இது போன்ற துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. 3 நாட்களுக்கு முன்பு அங்குள்ள தாமுலி பாஸ் என்ற இடத்தில் போலீசார் போதை மருந்து கும்பல் இடையே நடந்த சண்டையில் 19 பேர் கொல்லப்பட்டனர்.
No comments:
Post a Comment