Friday, February 12, 2010

1000 இலங்கையர்களுக்கு கனடாவில் தொழில் வாய்ப்பு ஒப்பந்தம் கைச்சாத்து

2010ம் ஆண்டில் ஆயிரம் இலங் கையர்களுக்கு கனடாவில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பத ற்குக் கனடிய நிறுவனமொன்று முன் வந்துள்ளது. இதற்கான ஒப்பந்த மொன்று நேற்று தொழிலமைச்சில் தொழிலுறவுகள், மனிதவள அமைச்சர் அதாவுத செனவிரத்னவின் முன் னிலையில் இடம்பெற்றது.

இதுபற்றி அமைச்சர் தெளிவுபடுத்துகையில்:- கனடாவிலுள்ள கீ கின் கல்லூரியும் இலங்கையில் வடமேல் மாகாணத்திலுள்ள வயம்ப பயிற்சி நிறுவனமும் இணைந்தே மேற்படி வேலை வாய்ப்புக்களுக்கான செயற் றிட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன. கனடாவின் நடைமுறை நிர் வாக மொழி ஆங்கிலமாக உள்ள தால் மொழிப்பயிற்சி மற்றும் தொழிற் பயிற்சிகளை வழங்குவதுடன் தேர்ச் சியானவர்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான சகல நடவடிக்கைக ளையும் மேற்படி நிறவனங்களே முன்னெடுக்கும். அதற்கான ஒத்து ழைப்புக்களை மட்டுமே தொழி லமைச்சு வழங்கும்.

No comments:

Post a Comment