சந்திரிக்கா ஜெரலுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவிப்பு.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க அவர்களை இன்று நண்பகல் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா சந்தித்தார். இச்சந்திப்பை அடுத்து ஊடகவியலாளர் மாநாட்டில் சந்திரிகா தனது ஆதரவை ஜெனரலுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளதுடன் எதிர்காலத்தில் நாட்டில் ஜனநாயகத்தினை மீளக் கொண்டுவரும் பொருட்டு ஜெனரலுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
அங்கு பேசிய அவர் மஹிந்த தலைமையிலான அரசு சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாட்டில் ஜனநாயக உரிமைகளை மறுத்துள்ளதுடன் குடும்ப ஆட்சிக்கு வழிதிறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சந்திப்பின்போது ஜெனரலின் தேர்தல் விஞ்ஞாபனம் முன்னாள் அதிபருக்கு வழங்கப்பட்டதுடன் அது அவரால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
2 comments :
hi ilankainet this is not fair
என்ன ஐயா தேர்தல் செய்திகள் மட்டுமே வெளியிடுகிறீர்கள். தமிழர் பத்திரிகை துறை இன்னும் மாறவில்லையா? எல்லாவற்றுக்கும் இடமளியுங்கள்.
Post a Comment