Wednesday, January 20, 2010

அமைச்சுக்களின் செயலாளர்கள் கைப் பொம்மைளாக செயற்படுகின்றனர். பொன்சேகா.

பாதுகாப்பு அமைச்சைத் தவிர்ந்த ஏனைய அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களும் அரசாங்கத்தின் கைப்பொம்மைகளாக செயற்படுவதாக ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மக்களின் விருப்பு வெறுப்புக்களை நிராகரித்து தமது விருப்புக்கு ஏற்ப செய்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், நாட்டின் குடிமக்கள் சிறு தவறுகளை புரிகின்றபோது அவர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளவதாகவும், பெரிய தவறுகளை புரிகின்ற அரசியல் செல்வாக்குடையோர் தப்பித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment