Friday, January 1, 2010

கையடக்க தொலைபேசி பாவனையாளர்கள் அனைவருக்கும் ஜனாதிபதி எஸ்எம்எஸ் வாழ்த்து.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இலங்கையில் கையடக்க தொலைபேசி பாவனையாளர்கள் அனைவருக்கும் எஸ்எம்எஸ் ஊடாக புதுவருட வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளதாக தெரியவருகின்றது. இச்செய்தியான இலங்கை வரலாற்றில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி நேரடியாக வாழ்த்தும் நிகழ்வாக அனைவரும் அதிசயம் அடைந்துள்ளனர்.

அதே நேரம் வாழ்த்துச் செய்தியில் சற்று அரசியலும் கலந்திருந்தாக கூறப்படுகின்றது. அதாவது தான் நாட்டுமக்களுக்கு வழங்கிய உறுதி மொழிகளை நிவர்த்தி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்த்துச்செய்தியானது சிங்களத்தில் ஆங்கில எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com