Tuesday, January 5, 2010

ஜெனரல் பொன்சேகா உத்தியோக பூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றபோதும் தனக்கு பொருத்தமான இல்லம் ஒன்று கிடைக்கும்வரை இராணுவத்தளபதிக்கான உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் தங்கியிருந்த ஜெனரல் பொன்சேகா கடந்த 02ம் திகதி அங்கிருந்து வெளியேறியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வாசஸ்தலத்தில் இருந்து வெளியேறும்போது சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவேண்டிய வழமையான நடைமுறைகளை நிராகரித்து எதேச்சையாக அவர் வெளியேறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள இராணுவப் பேச்சாளர், வாசஸ்தலத்தில் உள்ள பொருட்கள்யாவும் சரியாக உள்ளதா என பரீட்சித்தபின்னர் புதிய இராணுவத்தளபதி அங்கு குடிபுகுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com