Friday, January 8, 2010

அமில தேரர் பிணையில் விடுதலை

வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக பணம் வாங்கி ஏமாற்றினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 27ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொரண மஜிஸ்ரேட் இன் உத்தரவின் பேரில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் அமில தேரர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

25000 ரொக்கப்பிணையிலும், 200000 சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்ட அவரிடம் தனது கடவுச்சீட்டை ஒருவாரகாலத்தினுள் நீதிமன்றில் பாரமளிக்குமாறும் , மாதத்தில் கடைசி ஞாயிற்றுக் கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் கையொப்பம் இடுமாறும் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment