Monday, January 18, 2010

நகர சபை உறுப்பினர் வீடு மீது துப்பாக்கி பிரயோகம்.

மாத்தளை நகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் வீடு மீது இனந்தெரியாத நபர்கள் நேற்று முன்தினம் இரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்தாக ஐ.தே.கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இத்தாக்குதலில் எவருக்கும் எவ்வித சேதங்களும் இடம்பெறவில்லை எனக் கூறியுள்ள அவர், சம்பவ தினத்திற்கு முதல் நாள் இரவு நகர சபை உறுப்பினரது வீட்டிற்கு வந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்கள் அவர் ஜெனரல் பொன்சேகாவிற்கு வழங்கும் ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொள்ளவேண்டும் என மிரட்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment