Thursday, January 7, 2010

பொன்சேகா த.தே.கூட்டமைப்புடன் செய்துள்ள ஒப்பந்தத்தை வெளிவிடவேண்டும். யாப்பா

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்ததையடுத்து, ஜெனரல் பொன்சேகா தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஆயுதக் கொள்வனவுகளில் சட்டத்திற்கும் ஒழுங்குக்கும் மாறாக சரத் பொன்சேகா நடந்து கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் பேசும்போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர், ஆயுதக்கொள்வனவுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மோசடிகள் தொடர்பாக ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அரசாங்கம், சரத் பொன்சேகா மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com