Wednesday, January 6, 2010

அமெரிக்க உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டது: அதிபர் ஒபாமா வேதனை

கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று ஆம்ஸ்டர்டாமில் இருந்து டெட்ராய்ட் வந்த அமெரிக்க விமானத்தை நடுவானில் தகர்க்க நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியதாவது:- விமானத்தை தகர்க்க முயன்ற தீவிரவாதி பற்றிய தகவல்கள் அமெரிக்க உளவுத்துறைக்கு தெரிந்து இருக்கிறது. ஆனால் அவற்றை அவர்கள் சரியான முறையில் தெரிவித்து உஷார்படுத்த தவறிவிட்டனர். இதன் மூலம் அமெரிக்க உளவுத்துறை சரியான முறையில் இல்லை என தெரிய வந்துள்ளது. விமானத்தை தகர்க்க நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டாலும் இந்த விஷயத்தில் அமெரிக்க உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டது. இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. இனி இது போன்று நடக்க கூடாது என உளவுத்துறையை எச்சரிக்கிறேன் என்று கூறினார்.

No comments:

Post a Comment