Monday, January 25, 2010

ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறினாரா?

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று பிற்பகல் விசேட விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இந்திய உயர்மட்ட தலைவர்களுடனான அவசர பேச்சுவார்த்தை ஒன்று ஏற்பாடாகியுள்ளதாகவும் நாளை தேர்தலில் வாக்களிப்பதற்கு அவர் நாடு திரும்புவார் எனவும் நம்பந்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

இலங்கையில் தேர்தல் இடம்பெறுகின்ற நிலையில் இந்தியாவிற்கான அவசர பயணத்தின் பின்னணி என்னவென்பது தெரியவரவில்லை.

இலங்கையில் தேர்தல் முடிவுகளை அடுத்து நிலவரங்கள் மோசமடையலாம் என்ற அச்சம் தோன்றியுள்ள நிலையில், அவ்வாறானதோர் நிலைமை உருவாகின் இந்திய இராணுவத்தின் உதவி கோரும் நோக்கில் குறிப்பிட்ட அவசரப் பேச்சுவார்த்தை ஏற்பாடாகியுள்ளதா என பலரும் சந்தேகிக்கின்றனர்.

No comments:

Post a Comment