Sunday, January 3, 2010

ஐக்கிய தேசியக் கட்சியின் பண்டாரகம அமைப்பாளர் மஹிந்தவிற்கு ஆதரவு.

ஐக்கிய தேசியக் கட்சியின் பண்டாரகம அமைப்பாளர் திலக் கருணாரட்ண எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு உதவி வழங்க முடிவு செய்துள்ளார். களுத்துறையில் நேற்று இடம்பெற்ற ஜனதிபதி மஹிந்தவிற்கான தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட அவர் இவ்விடயத்தை தெரியப்படுத்தினார். .

இவர் ஜாதிக ஹெல உறுமயவிலிருந்து பிரிந்து சென்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியில் வகிக்கும் சகல பதவிகளையும் ராஜநாமா செய்துள்ளபோதும் சாதாரண கட்சி அங்கத்தவராக ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment