Wednesday, January 13, 2010

பொலநறுவையில் பதட்டம் நிலவுகின்றது.

ஜெனரல் பொன்சேகாவின் பொலநறுவை தேர்தல் பிரச்சார அலுவலகத்திற்கு முன்னால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களுக்கும் , ஜெனரல் பொன்சேகாவின் ஆதரவாளர்களுக்கும் இடையே சண்டையை ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சண்டையில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சண்டையை தொடர்ந்து பிரதேசத்தில் பதட்டம் நிலவுவதாக தெரியவருகின்றது.

நிலைமைகள் மோசமாக காண்படும் பிரதேசங்களுக்கு விசேட பொலிஸ் பிரிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலநறுவை பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி தயாநந்த தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment