Friday, January 29, 2010

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம்.

2010 ஜனாதிபதித் தேர்தலும் அது விட்டுச் செல்லும் பாடங்களும் என்னும் கருப்பொருளில் ஆய்வுக் கூட்டமும் கலந்துரையாடலும் யாழ்பாணத்தில் நடைபெறவுள்ளது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் என்ன? அது சிறுபான்மை மக்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தலாம்? வடக்கு கிழக்கு உட்பட தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்த விதம் எத்தகைய செய்தியை பறைசாற்றி நிற்கின்றது? இது தென்னிலங்கையில் எத்தகைய மனத் தாக்கங்களை உருவாக்கும்? இத்தேர்தல் வெற்றியின் பின்னர் பெரும்பான்மை சமூகத்தினரின் மனோநிலை எவ்வாறுள்ளது போன்ற பல விடயங்கள் இக்கூட்டத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ளன.

ஜனவரி 31ம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 3 மணிக்கு யாழ். பலநோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபன நிறைவேற்றதிகாரியும் தென்னிலங்கையில் பிரபல அரசியல் விமர்சகருமாகிய திரு. கருணாரத்ன பரணவிதாரண இங்கு சிறப்புரையாற்றவுள்ளார். மற்றும் யாழ். பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும் ஹாட்லிக் கல்லுரியின் முன்னாள் அதிபருமான முருகுப்பிள்ளை ஸ்ரீபதி, சட்டத்தரணி செல்வி கோசலை மனோகரன், ஊடகவியலாளர் மனோரஞ்சன், சட்டத்தரணி சஞ்சய் விக்னராஜா ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.

குடிமக்கள் குரலுக்கான மேடை என்னும் அமைப்பினர் இக்கூட்டத்தை ஒழுங்கு செய்திருப்பதோடு விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் யாழ். மாவட்ட இணைப்பாளர். ந. தமிழ் அழகன் இந்நிகழ்விற்குத் தலைமை தாங்குவார்.


No comments:

Post a Comment