Saturday, January 9, 2010

ஜனாதிபதி நாளை காத்தான்குடிக்கு விஜயம்

புதிய காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள முகைதீன் ஜூம்மாப் பள்ளிவாயல் புதிய காத்தான்குடி பெரிய பள்ளிவாயல் என பெயர் மாற்றப்பட்டு ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்படுவதற்கான ஏற்பாடுகள் கிழக்குமாகாண சுகாதார மற்றும் தொழில் நுட்ப அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவின் ஏற்பாட்டில் நடைபெற்றிருந்தன.

இதன் தொடர்ச்சியாக இப்பள்ளிவாயலுக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்து கொள்ள இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் நாளை காத்தான்குடிக்கு வருகைதருகின்றார். இவருடன் கிழக்கு மாகாண முதல்வர் மற்றும் பல அரசியல் வாதிகளும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கான ஆதரவு வடகிழக்கில் பரவலாக காணப்படும் நிலையில் கிழக்கிற்கான ஜனாதிபதியின் இந்த விஜயம் மிகவும் முக்கியமானதாக அமையவுள்ளது.

கிழக்கின் விசேட தொடர்பாளர்.

No comments:

Post a Comment