Sunday, January 3, 2010

தேர்தல்கள் ஆணையாளரின் கையில் அதிகாரம் : எஸ்.எஸ்பி யின் இடமாற்றம் ரத்து.

அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவிற்கு வழங்கப்பட்ட திடீர் இடமாற்றம் தேர்தல்கள் ஆணையாளரின் தலையீட்டால் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் காணப்படும் சட்டத்திற்கு முரணான ஜனாதிபதி மஹிந்தவின் கட்டவுட்டுக்களை அகற்றுமாறு தேர்தல்கள் ஆணையாளரினால் விடுக்கப்பட்டிருந்த அறிவுறுத்தலுக்கமைய அம்பாறை நகரில் காணப்பட்ட கட்டவுட்டுக்கள் யாவும் அம்பாறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டதை தொடர்ந்து அரசினால் அவருக்கு கிளிநொச்சி பிரதேசத்திற்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டள்ளது.

இவ்விடயம் எதிர்கட்சிகளினால் தேர்தல்கள் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து , தேர்தல் ஒன்று இடம்பெறுகின்ற இடமாற்றங்களை தடுப்பதற்கு தேர்தல் ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட இடமாற்றத்தை நீக்குமாறு தேர்தல் ஆணையாளர் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியதை தொடர்ந்து , இடமாற்றம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com