Friday, January 1, 2010

மனநோயாளியை நீரில் மூழ்கடித்த பொலிஸார் சிறையில் மாரடைப்பால் மரணம்.

பம்பலப்பிட்டி கடற்கரையில் மனநோயாளி ஒருவரை பலவந்தமாக நீரில் மூழ்கடித்த குற்றச்சாட்டின் பேரில் வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகித்தர் இன்றுகாலை சிறைச்சாலை அறையில் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட மனிதாபிமானமற்ற கொலை பல தரப்பினராலும் கண்டிக்கப்பட்டிருந்ததும் , அக்கொலையின் சாட்சிகள் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமையும் யாவரும் அறிந்தவிடயம்.

No comments:

Post a Comment