Monday, January 4, 2010

முடிந்தால் பொன்சேகாவை நீதிமன்றுக்கு கொண்டு செல்லுங்கள். ஜேவிபி் அரசுக்கு சவால்.

ஜெனரல் சரத் பொன்சேகா ஆயுதக் கொள்வனவில் மோசடியில் ஈடுபட்டுள்ளாதாக அரசினால் குற்றஞ்சுமத்தப்பட்டுவரும் நிலையில் , குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் உண்மையானவையாயின் அரசு அவரை நீதிமன்றுக்கு கொண்டு செல்லவேண்டும் என ஜேவிபி சவால் விடுத்துள்ளது.

மேற்கண்டவாறு ஊடகவியாளர்களிடம் தெரிவித்த ஜேவிபி பா.உ விஜித கேரத், இவ்விடயம் தொடர்பாக அரசுடன் நேரடி விவாதம் ஒன்றை மேற்கொள்வதற்கு எந்த நேரத்திலும் தயாராக இருப்பாதாக தெரிவித்துள்ளார்.

அதே நேரம் இவ்வாறான விவாதம் ஒன்றிற்கு வருமாறு விமல் வீரவன்ச அழைப்பு விடுத்திருந்தபோது, சிங்கம் ஒன்று சிங்கத்துடன் மோதும் எனவும் மலம் தின்னும் பன்றியுடன் அல்ல எனவும் மஹிந்த ராஜபக்சவுடனான விவாதத்திற்கு அவர் சரத் பொன்சேகா தயாராக இருக்கின்றார் எனவும் ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவர் பதிலளித்திருந்த நிலையில், முடிந்தால் ஜெனரல் பொன்சேகா நேரடி விவாதம் ஒன்றிற்கு 48 மணிநேரத்தினுள் வரட்டும் என விமல் வீரவன்ச மீண்டும் தெரிவித்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment