Tuesday, January 5, 2010

மட்டக்களப்பில் ஜெனரல் பொன்சேகாவின் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள்.

காத்தான்குடியில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வரலாறு காணாத பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். கூட்டத்தில் எதிர்கட்சிகளின் கூட்டு முன்னணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் அனைத்து தலைவர்களும் கலந்திருந்தனர்.

அங்குபேசிய ஜெனரல் பொன்சேகா, இலங்கையில் சகல இன மக்களும் ஒற்றுமையாகவும் சம உரிமையுடனும் வாழ்வதற்கு உரியதோர் நிலைமையை உருவாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் , தான் அல்லது தனது குடும்பத்தின் ஊழல்கள் ஏதாவது மேற்கொண்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டால் தம்மை சட்டத்தின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.






No comments:

Post a Comment