Saturday, January 30, 2010

லங்கா இரிதா பத்திரிகை அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது.

லுங்கா இரிதா பத்திரிகை சீல் வைக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தினை உறுதிப்படுத்தியுள்ள பொலிஸ் பேச்சாளர் எஸ்எஸ்பி கருணாரட்ண நீதிமன்ற உத்தரவுக்கமைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நுகேகொடையில் உள்ள மேற்படி பத்திரிகையின் அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இப்பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சந்தண சிறிமல்வந்த நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணையை ஏற்று குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு சென்றிருந்தபோது 2 மணித்தியாலயங்களுக்கு மேலாக இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்டுள்ள பத்திரிகை ஆசிரியருடன் நேற்று பிற்பகல் அவ் அலுவலகத்திற்கு சென்றிருந்த குற்றப் புலனாய்வு பிரிவினர் அங்கு சல்லடை போட்டு தேடுதல் நாடாத்தியிருந்தனர்.

No comments:

Post a Comment