Thursday, January 7, 2010

பிரபாகரனின் தந்தை காலமானார் . (2ம் இணைப்பு)

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை இன்று காலமானார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பணாகொடை இராணுவ முகாமில் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். காலமாகும் போது இவருக்கு வயது 86.

வன்னியில் யுத்தம் முடிவடையும் தறுவாயில் மக்களோடு மக்களாக வந்து இடைத்தங்கல் முகாமொன்றில் தங்கியிருந்தபோது, படையினரால் இனம்காணப்பட்ட அவர் பணாகொடை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

காணி உத்தியோகத்தராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் தென் இந்தியாவில் நீண்ட காலமாக வசித்து வந்தார். பின்பு நான்காம் ஈழப்போரின் போது இலங்கை வந்து வன்னியில் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவில் கொல்லம் மாவட்டத்தில் பிறந்த இவர் தனது 22வது வயதில் இலங்கைவந்து இலங்கை அரச திணக்களத்தில் இணைந்து கடமைபுரிந்து ஓய்வு பெற்றிருந்தார்.

மரணமடையும்போது அவர் உபாதைநோய்க்கு உட்பட்டிருந்தாக செய்திகள் தெரிவிக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com