குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர நாடு தயாரகவுள்ளது. ரில்வின் சில்வா.
நாட்டில் உள்ள குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கு எதிர்வரும் 26ம் திகதியை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக நேற்று மகியங்கணையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அங்கு கூடியிருந்த பெருந்திரளான மக்கள் மத்தியில் பேசிய அவர், இந்நாட்டை ஆட்டிக்கொண்டிருந்த 30 வருடகால கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு நாட்டில் இடம்பெறும் ஊழல்களை ஒழிப்பது பெரியதோர் காரயமல்ல என்றார்.
ராஜபக்சவின் ஊழல்கள் நிறைந்த அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டு நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டக்கூடிய தலைவர் ஒருவர் மக்களால் ஆட்சியில் அமர்த்தப்படவுள்ளார் எனவும் கூறியுள்ளார்:
0 comments :
Post a Comment