Tuesday, January 12, 2010

இந்தியா ஒத்துக்கொண்டால் பிரபாகரனின் தாயார் அங்கு செல்லலாம். ஜனாதிபதி

இந்தியா ஒப்புக்கொண்டால் பிரபாகரனின் தாயார் தமிழகத்திற்கு சென்று வசிக்க அனுமதி அளிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை மரணமடைந்த நிலையில், அவரின் தாயாரை தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மற்றும் பிரபாகரனின் உறவினர் ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

பிரபாகரனின் தாயாரை பராமரிக்க தயாராக இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் விருப்பம் தெரிவித்தனர். எனினும் பிரபாகரனின் தாயார் மற்றும் மாமியார் தங்களின் விருப்பம் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் கொழும்பு நகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ராஜபக்சேவிடம் இதுதொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜனாதிபதி , 'இந்தியா ஒப்புக்கொண்டால், பிரபாகரனின் தாயார் மற்றும் மாமியார் ஆகியோர் அங்கு செல்லலாம்' என தெரிவித்தார்.

No comments:

Post a Comment