Sunday, January 3, 2010

மட்டக்களப்பில் ஜெனரல் பொன்சேகாவின் தேர்தல் பிரச்சாராத்திற்கு அனுமதி.

மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக பொன்சேகாவின் தேர்தல் பிரச்சாரங்களுக்கான மட்டகளப்பு மாவட்ட முகாமையாளர் பசீர் சேகுதாவூட் தெரிவித்துள்ளார்.

கடந்தவாரம் தேர்தல் பிரச்சாரத்தினை மேற்கொள்வதற்காக மட்டக்களப்பு மாநகர சபையிடம் அனுமதி கோரியிருந்தபோது அதே நேரத்தில் அங்கு பிறிதொரு நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டு மேயரினால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தாக தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் 5ம் திகதி தமக்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் 05ம் திகதி செவ்வாய்கிழமை பிற்பகல் 01 மணியிலிருந்து 05 மணிவரை காந்தி சதுக்கத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com