Sunday, January 3, 2010

சிறிகாந்தா பசில் ராஜபக்சவின் எடுபிடியாக செயற்படுகின்றார். ரணில்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுன்ற உறுப்பினரான ரெலோ இயக்கத்தை சேர்ந்த சிறிகாந்தா தற்போது பசில் ராஜபக்சவின் எடுபிடியாக செயற்பட்டுவருவதாகவும் ஜனாதிபதிக்கு ஆதரவாகவே சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாகவும் எதிர்கட்சிகளின் கூட்டு முன்னணியான ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரும் , எதிர் கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று பிற்பகல் இடம்பெற்ற சரத் பொன்சேகா சார்பான தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்துடன், இடைத்தங்கல் முகாம் மக்களுடைய தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் பசில் ராஜபக்சவிற்கு சிறிகாந்தா வாழ்துக்கூறியதாகவும், சிறிகாந்தாவே சிவாஜிலங்கத்தை மஹிந்தவிற்கு ஆதரவாக தேர்தலில் நிறுத்தியுள்ளதாகவும் மேலும் கூறியுள்ளார்.

அத்துடன் மஹிந்த அரசு புளொட் இயக்கத்தினரை பயன்படுத்தி அனுராதபுரத்தில் உள்ள சிங்கள மக்களை கொன்று குவித்துள்ளதாகவும் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com