Tuesday, January 5, 2010

பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை வேண்டும். தேர்தல்கள் ஆணையாளர்

தேர்தல் சட்டதிட்டங்களுக்கு அமைய மேற்கொள்ளப்படாத சுவரொட்டிகள் மற்றும் கட்டிவுட்டுக்களை அகற்றவும் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவும் தவறும் பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் பொலிஸ் மா அதிபரை அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறான பிரச்சாரச் சுவரொட்டிகள் மற்றும் கட்டவுட்டுக்கள் அகற்றப்பட்டுள்ளதாக பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரிகள் தெரிவிக்கின்றபோதும் அவை முற்றுப்பெறவில்லை என்பற்கான வீடியோ பதிவுகளை மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் பொலிஸ் மா அதிபருக்கு காண்பித்து நிருபித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.


No comments:

Post a Comment