Wednesday, January 13, 2010

திஸ்ஸநாயகம் சிறையிலிருந்து வெளியேறினார்.

பங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கடந்த 2008 மார்ச் 7 ம் திகதி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளர் திஸ்நாயகத்திற்கு உயர் நீதிமன்றினால் 20 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்த திஸ்ஸநாயகத்தின் பிணை மனு மேல் முறையீட்டு நீதிமன்றினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், கடந்த திங்கட் கிழமை பிணை வழங்கப்பட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவு இன்று சிறைச்சாலைகள் நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment