Thursday, January 7, 2010

சிறுபான்மை இனங்களை இழிவுபடுத்தியவரை ஆதரிப்பது சரியா? அமைச்சர் பைசர் முஸ்தபா

கண்டி மாவட்ட முஸ்லிம் மக்கள் கடந்த காலங்களைப் போன்று யானையை ஆதரித்தால் தொடர்ந்தும் நடு வீதியிலே நின்று திண்டாட வேண்டிவரும் என சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். நுகவல, என்டறுதென்ன என்னுமிடத்தில் குடிநீர் விநியோகத் திட்டமொன்றைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்நாடு சிங்களவர்களுக்கே சொந்தமானது என்றும், முஸ்லிம்கள் சவூதி அரேபியா செல்ல வேண்டும் என்றும் தமிழர்கள் தமிழ் நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்றும் கூறியவர் தான் ஜெனரல் சரத் பொன்சேகா.

இவ்வாறு சிறுபான்மை மக்களை இழிவுபடுத்தியவருக்கு எப்படி தமிழ் - முஸ்லிம் மக்கள் வாக்களிப்பது? தமிழ் - முஸ்லிம் வாக்காளர்களுக்கு மத்தியில் இது பற்றி விளக்கிக் கூற வேண்டும்.

அவர் அதை அப்படியல்ல, இப்படி என்று மாற்றிக் கூறலாம். அவைகள் உண்மையல்ல. ஒருவரது உள்ளத்தில் அல்லது அடிமனதில் உள்ளவைகளே வெளியாகிறது. பேச்சு அடிக்கடி மாறலாம். ஆனால் உள்ளத்தில் இருக்கும் அடிப்படை எண்ணம் மாறாது. ஜெனரல் சரத் பொன்சேகாவின் அடிமனதில் உள்ள சிறுபான்மை விரோத உணர்வை மாற்ற முடியாது. அது மாறாது.

யானைக்கு வாக்களித்து எங்கள் கிராமத்திற்கு ஏதும் நடந்ததா? தொடர்ந்தும் நீங்கள் யானையை ஆதரிப்பதில் பயன் இல்லை.

சீனி உருண்டை அரசியல் சரிவராது. சிறு பிள்ளைக்கு சீனி உருண்டை கொடுப்பது போல் சிலர் உங்களிடம் வந்து கூரைத் தகடு தருவார்கள். அரிசி மூடைகளை அனுப்பி வைப்பார்கள். இப்படியான சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளைக் கண்டு ஏமாற வேண்டாம்.

மிக நீண்ட காலமாக ஹாரிஸ் பத்துவ பிரதேச சபை பிரிவைச் சேர்ந்த எண்டருதென்ன முஸ்லிம் கிராமத்தின் முக்கிய பிரச்சினைக ளில் ஒன்றான குடிநீர் பிரச்சினைக் கான தீர்வாக புதிய நீர் விநியோ கத் திட்டத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

2 comments:

  1. ஜெனரல் சரத் பொன்சேகா எத்தனையோ மேடைகளில் தான் சிறுபான்மை இனங்களை இழிவுபடுத்தி கூறவில்லை என்ருகூரியும்கூட. தனது சய இலாபங்களுக்காக அதையே தூக்கிப்பிடித்துக்கொண்டு ஊளைவிடும் அமைச்சர் பைசர் முஸ்தபாவும்,மகிந்தவோடு ஒட்டி இருக்கும் ஏனைய அமைச்சர்களும் சிலவேளை சரத் பொன்சேகா அப்படிகூரியிருந்தாலும் அது எப்போது கூறினார்? மகிந்தவோடு ஒட்டயுரவாடும் போதுதானே கூறினார்.
    அப்போதெல்லாம் வாய் மூடி மௌனியாக இருந்த இந்த எழும்புபிறக்கிகள் இப்போது நாக்கை தொங்க போட்டுக்கொண்டு சரத் பொன்சேகா சொல்லாத கருத்துக்கு ஊளையிட்டுதிரிவது எதற்க்காக என்பது சுயாதீனமாக சிந்திக்க கூடிய மக்களுக்கு நன்கு புரியும்.

    "இலங்கை வாழ் தமிழ், முஸ்லிம் மக்கள் இந்நாட்டில் வந்தேறு குடிகளாவார்கள். சிங்கள மக்கள் மட்டுமே இந்நாட்டின் பூர்வீக குடிகளாவார்கள்" என்று மகிந்தவின் நெருங்கிய நண்பரும்,ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளரும், சுற்றாடல் அமைச்சருமான பாடலி சம்பிக ரணவக்க கூறிய கருத்துக்கு.
    ஊளைவிடும் அமைச்சர் பைசர் முஸ்தபாவும்,மகிந்தவோடு ஒட்டி இருக்கும் ஏனைய அமைச்சர்களும் இதுவரையும் எதுவித கண்டனமோ,எதிர்போதெரிவிக்காமல் இருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

    ReplyDelete
  2. மேலே கூறிய அன்பர் மிகவும் சரியான கருத்தையே கூறி இருக்கிறார்

    ReplyDelete