Monday, January 11, 2010

மைக்கேல் ஜாக்சன் கொலை செய்யப்பட்டார்: ஆங்கில பத்திரிகை தகவல்

`பிரபல பாப் இசைப்பாடகர் மைக்கேல் ஜாக்சன் கொலை செய்யப்பட்டார்' என்று லண்டனில் இருந்து வெளியாகும் `நியூஸ் ஆப் த வேர்ல்டு' என்ற ஆங்கில பத்திரிகை தெரிவித்து உள்ளது. மேலும் அந்த பத்திரிகை, கடந்த ஆகஸ்ட் 31-ந் தேதி டாக்டர் கிறிஸ்டோபர் ரோஜர்ஸ் ஒரு திருத்தப்பட்ட சான்றிதழ் அளித்தார். அதில், இன்னொருவர் மைக்கேல் ஜாக்சனுக்கு நரம்பு மூலம் செலுத்திய ஊக்க மருந்தால் இறந்து விட்டார் என்று கூறப்பட்டு உள்ளது. அதாவது இன்னொருவரால் அவருக்கு மரணம் (ஹோமிசைட்) விளைந்துள்ளது என்று கூறப்பட்டு உள்ளது. இரு சான்றிதழ்களும் எங்களிடம் உள்ளன'' என்று தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment