Saturday, January 9, 2010

அங்கவீனர்களான படையினர் மீது தாக்குதல்.

கொரண பிரதேசத்தில் அங்கவீனர்களான படைவீரர்கள் மீது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்கள் இரக்கமற்ற தாக்குதல் நடாத்தியதாக தெரிவருகின்றது. கோரண, கலபத்த பிரதேசத்தில் இடம்பெறவுள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றுக்கான ஏற்பாட்டு வேலைத்திட்டங்களில் ஈடுபட்ட அவர்கள் வீடு திரும்பும் போது களுத்துறை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுன்ற நிர்மல கொத்தலாவலவின் குழுவினரே இவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.

தாக்குதலுக்கு உள்ளான அங்கவீனர்களான படையினர் மூவரும் கொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்தாகவும், படுகாயமடைந்துள்ள அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்கையில் பிரதேச மக்கள் சென்று தாக்குதல்தாரிகளை தடுத்திருக்காவிட்டால் நிலைமைகள் ஆபத்தாக முடிந்திருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது:

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com