Tuesday, January 12, 2010

மேற்கத்திய நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை

ஈரான் நாடு, அணு ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளது. அது ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. ஈரான் நாடு அணு ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அணு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. ஈரான் மீது மேற்கத்திய நாடுகள் ராணுவ நடவடிக்கை எடுத்து அதை மிரட்டி பணிய வைக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், எங்கள் மீது மேற்கத்திய நாடுகள் போர் தொடுத்தால், மோசமான விளைவுகள் ஏற்படும் என்று ஈரான் அந்த நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது.


No comments:

Post a Comment