ரணில் விக்கரமசிங்கவின் வீட்டை சோதனையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டில் ஆயுதங்களும் , ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிரான சுவரொட்டிகளும் மறைத்து வைத்திருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் தெரிவித்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர், அவ்வீட்டினை சோதனை செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை வேண்டினர்.
குறிப்பிட்ட தகவல்களுக்கான தகுந்த ஆதாரங்களை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு தெரிவித்த மஜிஸ்ரேட் மீகொட, வீட்டினை சோதிப்பதற்கான அனுமதியை மறுத்துள்ளார்.
அதேநேரம் விஜெயா நிறுவனத்திற்கு சொந்தமான பியகம அச்சகத்தை சோதிப்பதற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விடுக்கப்பட்ட வேண்டுதலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment