ஈரான் மீது புதிய தடைகளை விதிப்பதற்கு ஆதரவாக அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். ஈரான் அதன் அணுவாயுதத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று உலக நாடுகள் ஈரானை நெருக்கி வரும் வேளையில் அந்நாட்டுக்கு எதிராக புதிய தடைகளை அமெரிக்கா விதிக்கவுள்ளது.
புதிய தடைகள் விதிப்பதால் உரிய பலன்கள் கிடைக்கும் என்று ஜனநாயகக் கட்சி செனட்டர் கிரிஸ் டூட் கூறினார். ஈரானின் அணுவாயுத நடவடிக்கைகள் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் பாதுகாப்புக்கு கடுமையான மிரட்டலாக உள்ளன என்று அவர் சொன்னார்.
அணுவாயுதங்கள் தயாரிப்பதில் ஈரான் ஈடுபட்டுள்ளதாக மேற்கத்திய நாடுகள் கூறும் குற்றச்சாட்டை ஈரானிய அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment