Thursday, January 7, 2010

அரசாங்கம் சாகப்போகிறது. மரணச்சடங்குகள் தொடர்பாக பேசலாம். லால் காந்த

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் லால்காந்த அரசின் பக்கம் தாவவுள்ளதாக சில ஊடகங்கள் ஊகங்களை வெளியிட்டிருந்தன. இது தொடர்பாக அததெரணவிற்கு கருத்து தெரிவித்த பா.உ லால் காந்த எதிர்வரும் 26 ம் திகதியுடன் அரசாங்கம் மரணத்தை தழுவ உள்ளதாகவும் , அவ்வாறானதோர் அரசாங்கத்துடன் தனக்கு எவ்வித பேச்சுவார்த்தைகளும் இல்லை என தெரிவித்துள்ள அவர் அவ்வாறு பேசுவதாக இருந்தால் மரணச்சட்குகள் தொடர்பான ஏற்பாடுகளைச் செய்வதற்கே பேசவேண்டியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

நேற்று ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் இவ்விடயம் தொடர்பாக கேட்டிருந்தபோது அவர், லால்காந்த அண்மைக்காலங்களாக அடிக்கடி மஹிந்த ராஜபக்சவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவதாகவும் லால்காந்தா கட்சி தாவுவாரா என்ற விடயத்தை அவரிடமே அறிந்துகொள்ளவேண்டும் எனவும் தெரிவித்திருந்த நிலையில் மேற்படி சூடான பதில் வந்துள்ளது.

No comments:

Post a Comment