வடமாகாணத்திற்கான தேர்தல் பிரச்சாரத்தினை இன்று யாழ்குடா நாட்டில் ஆரம்பிக்வுள்ள எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படக்கூடியவிதத்தில் பல அறிவித்தல்களை விடுப்பார் என நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் உடனடியாக நாட்டில் அமுலில் உள்ள அவசரகாலச் சட்டம் நீக்கப்படும் , குடாநாட்டில் காணப்படும் உயர்பாதுகாப்பு வலயங்கள் வாபஸ் பெறப்படும், மக்களுக்கான சுதந்திரமான நடமாட்டத்திற்கான உத்தரவாதம் அளிக்கப்படும் என்ற விடயங்களுடன் பல உறுதி மொழிகள் வழங்கப்படவுள்ளதாக அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ntw;wp ngwK bahjtupd; Ngr;R vLglhJ
ReplyDelete