Tuesday, January 12, 2010

நோர்வே தமிழ் முரசம் வானொலியின் அலைவரிசை அனுமதிப்பத்திரம் பறிபோனது.

தமிழ் முரசம் எனும் பெயரில் புலிகளால் நோர்வேயில் நடாத்தப்பட்டுவந்த வானொலிக்கான அலைவரிசை அனுமதிப்பத்திரத்தினை அந்நாட்டு அரசாங்கம் தடைசெய்துள்ளதாக தெரியவருகின்றது. தமிழ் வானொலி எனும் பெயரில் கடந்தகாலங்களாக புலிகளுக்கான பெரும் பிரச்சாரங்களை மேற்கொண்டுவந்த இவ்வானொலி தொடர்ந்தும் பயங்கரவாதத்தை தூண்டுவதான செய்திகளையும் பாடல்களையும் பரப்புரை செய்துவருவதாக நோர்வே நாடு உணர்ந்துகொண்டதை அடுத்து இம்முடிவுக்கு வந்துள்ளது.

No comments:

Post a Comment