பொன்சேகாவின் அலுவலகம் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவழைக்கப்பட்டுள்ளது.
ஜெனரல் சரத் பொன்சேகாவின் அலுவலகம் முகமூடி அணிந்த 200 க்கு மேற்பட்ட விசேட அதிரடிப்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டுவருவதாக தெரியவருகின்றது. இது தொடர்பாக வீசேட அதிரடிப்படையின் அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அலுவலகத்தின் உள்ளே சோதனையில் ஈடுபட்டுவருவதாகவும் தாம் அதற்கான வெளிப்பாதுகாப்பினை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
அலுவலம் சோதனையிடப்படுவதற்கான காரணம் என்ன என வினவியபோது, ராண்ஸ் ஏசியா ஹோட்டலில் ஜெனரல் பொன்சேகாவுடன் இருந்து கைது செய்யப்பட்டுள்ள இராணுவத்திலுருந்து தப்பியோடிய 9 பேரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இத்தேடுதல் நடைபெறுகின்றது என தெரிவித்த அவர் விசாரணைகளுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும் தாம் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கான வெளிப்பாதுகாப்பினை வழங்குவதாகவும் கூறினார்:
0 comments :
Post a Comment