Saturday, January 9, 2010

சபாநாயகர் மீது இந்தியாவில் செருப்பு வீச்சு.

பாராளுமன்ற சாபாநாகர் லொக்கு பண்டார இந்தியாவில் உள்ள வைதீஸ்வரன் ஆலயத்தை தரிசிக்க சென்றிருந்தபோது அவரது வருகையை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பெரியார் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை நாடத்தியுள்ளதுடன் அவர் பயணம் செய்த கார் மீது செருப்புக்களையும் வீசியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அங்கு காரில் இருந்து இறங்கிய சபாநாயகரது மகனை ஆர்பாட்டக்காரர்கள் அடித்தாகவும் அச்செய்திகள் தெரிவிப்பதுடன் போராட்டம் நடாத்தியவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர் எனவும் கூறுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com