Sunday, January 3, 2010

அரசு , எதிரணி ஆதரவாளர்கள் மோதல் : பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்.

கிரிபத்கொட பிரதேசத்தில் அரச மற்றும் எதிரணி ஆதரவாளர்களுக்கிடையில் பெரும் கலவரம் ஒன்று வெடித்துள்ளதுடன் நிலைமைகளை கட்டுப்படுத்த கலகதடுப்பு பொலிஸாரினால் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றது. எதிரணியினர் , துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருக்கும்போது அரச தரப்பின் ஆதரவாளர்கள் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர்.

கற்கள் மற்றும் பொல்லுகள் கொண்டு இருதரப்பும் தாக்குதல்களை நாடாத்தியுள்ளது. இதனால் பல வாகனங்கள் சேதமாகியுள்ளதாக தெரியவருகின்றது. நிலைமைகள் கட்டுப்படுத்த மேலதிக பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment